நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றின் காரணமாக மரணம்!

Covid 19
Covid 19

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவரும், அடையாளம் காணப்படாத சுமார் 70 – 80 வயதுக்கிடைப்பட்ட மருதானை காவல்துறை இனங்காணப்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்