நிச்சயமாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்படும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் தலைவருமான கு. திலீபன் தெரிவித்தார்.
இன்று(03) வவுனியா கருப்பனிச்சான்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபை தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பது தான் எங்களது கட்சியின் நிலைப்பாடாகும். அந்த மாகாண சபை தேர்தலிலே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பலப்படுத்தம் பட்சத்தில்தான் வடமாகாணம் வளமான மாகாணமாக வரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
சுதந்திர கட்சியினர் ஏற்கனவே இருந்த மாகாணசபையை கூட்டுமாறு தெரிவிப்பது அது அவர்களுடைய கருத்தே தவிர அது முடிவல்ல. பெரும்பான்மை உள்ள இவ் அரசில் முக்கிய பதவியில் இருக்கும் எமது அமைச்சர் கூட மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டும் என விரும்புகிறார். அவருக்கு நல்லதொரு சமிக்ஞை கிடைத்தபடியால்தான் எல்லா கூட்டங்களிலும் மாகாணசபை நடாத்தபடும், நடாத்தப்பட்ட வேண்டும் என கூறிவருகின்றார். ஆகவே நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம் மாகாணசபை தேர்தல் நடாத்தப்படும் என தெரிவித்தார்.