நாடளாவிய ரீதியில் போராட்டம் – வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எச்சரிக்கை!

bbc
bbc

நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுமையிலும் 54 ஆயிரத்திற்கும் அதிகமான வேலையில்லா ப் பட்டதாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரி கடந்த 2 வருடங்களுக்கு அதிகமாக போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.

அதன் விளைவாக 16,800 பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்ததுடன் அவர்களில் முதற்கட்டமாக 12 ஆயிரத்து 133 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.


இந்த நியமனங்களின் போதும் பட்டதாரிகள் உள்வாரி வெளிவாரி என பிரிக்கப்பட்டமையினால் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இதன் போது அதிகளவில் உள்வாரிப்பட்டதாரிகளுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.


ஆகவே, பட்டதாரிகளை அவ்வாறு பாகுபடுத்தாமல் அனைவருக்கும் நியமனங்கள் முறையாக வழங்கப்பட்ட வேண்டும்.


தற்போது 4,661 பட்டதாரிகளுக்கு இரண்டாம் கட்ட நியமனங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. ஆகவே, அரசாங்கம் உறுதியளித்ததைப்போன்று 16,800 பட்டதாரிகளுக்கும் உகந்த வித்தில் நியமனங்களை வழங்க வேண்டும். அதேபோல் மேலும் 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.

ஆகவே , இந்த நடவடிக்கைகள் உரிய வகையில் நடைபெறவேண்டும். என்பதுடன், அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிடின் நாடுதழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரயாற்றும்போதே சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.