வவுனியாவில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்!

வவுனியா பட்டாணிச்சூரில் வசித்த இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 
வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் மற்றையவர் 6 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் என்பதுடன் அவருக்கான பரிசோதனை கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட போதே தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது. 

இந் நிலையில் பட்டாணிச்சூரை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அறியக்கிடைக்கின்றது.