மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

கண்டி பூஜாபிட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்கோட்டை கொலனிக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் 31 கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற இடங்கள் மறு அறிவித்தல் வரையில் அவ்வாறே பேணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.