60 கோடி ரூபா பெறுமதியான போதை பொருட்களுடன் நால்வர் கைது!

kaithu

நீர்கொழும்பு கடற்பரப்பில் பாரிய அளவான போதைப்பொருட்களுடன் படகு ஒன்றில் பயணித்த நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த படகில் இருந்து 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 80 கிலோ கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போதைப்பொருட்கள் சுமார் 60 கோடி ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.