கொரோனா தொற்று உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு!

Corona Death 1
Corona Death 1

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கடந்த 2 ஆம் திகதியும், 86 வயதான ஆண் ஒருவர் கடந்த முதலாம் திகதியும் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.