சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

download 4 1
download 4 1

அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று காவற்துறை பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று இரு உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டிலேயே குறித்த சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுவன் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சிறுவனின் பிரதே பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது