இரண்டாவது நாளாகவும் தொடரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

VideoCapture 20210105 091332
VideoCapture 20210105 091332

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி முன்னெடுக்கும் உணவு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்று காலை போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை, துறைத்தலைவர் ஜீவசுதன் மாணவர்களையும், ஊடகவியாளர்களையும் எச்சரிக்கும் தொணியில் கதைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.