ஒரே இரவில் நான்கு ஆலயங்களில் திருட்டு!

IMG 20210105 125415
IMG 20210105 125415

வவுனியா கந்தபுரம், தவசிகுளம் பகுதியில் நேற்றையதினம் இரவு நான்கு கோயில்களில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இரவு குறித்த கோவில்களுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கதவினை உடைத்து உண்டியல்களை திருடிச்சென்றுள்ளதுடன் ஒலிபெருக்கி சாதனங்களையும் களவாடி சென்றுள்ளனர்.

கந்தபுரம் பிள்ளையார் கோவில் மற்றும், அம்மன் கோவில், பொன்னாவரசங்குளம் பிள்ளையார்கோவில், தவசிகுளம் வைரவர் கோயில், கோயில்களிலேயே குறித்த திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

சில கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தினை மாத்திரம் எடுத்து சென்றுள்ளதுடன், உண்டியல்களை ஆலய வளாகத்திலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்ப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.