குளவி கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவிகள்!

thumb large 841 1 497ac6fe636acfac43a29a63b0dcd056
thumb large 841 1 497ac6fe636acfac43a29a63b0dcd056

குளவி கொட்டுக்கு இலக்காகிய பாடசாலை மாணவிகள் மூன்று பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாகலை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் கற்கும் மாணவிகளே இன்று பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட பின்னர் வீடு திரும்பிய போதே அவர்கள் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.