தேர்தலை நடத்தினால் அரசுக்குப் படுதோல்வி – புலனாய்வுப் பிரிவு அதிர்ச்சி அறிக்கை

625.500.560.350.160.300.053.800.900.160.90 8
625.500.560.350.160.300.053.800.900.160.90 8

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, மாகாண சபைகளுக்கான தேர்தலைத் தற்போது நடத்தினால் அரசுக்குக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்கின்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புலனாய்வுப் பிரிவுகளால் அரச உயர்பீடத்துக்கு வழங்கப்பட்ட இரண்டு அறிக்கைகளில் இந்தத் தகவல் காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கண்டி, செங்கடகல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதனைக் கூறினார்.

இந்த அச்சத்தின் காரணமாகவே கோட்டாபய அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்து வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச புலனாய்வுத்துறை இரண்டு பகுதிகளாகப் புலனாய்வு செய்திருக்கின்ற நிலையில் அதில் கோட்டாபய அரசின் படுதோல்வி நிச்சயமாக உறுதிசெய்யப்பட்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.