மட்டக்களப்பில் போதை பொருள் வியாபாரி ஒருவர் கைது

kaithu

தனிமைப்படுத்தபட்ட பகுதியிருந்து அசிஸ் போதைபொருளை எடுத்துச் சென்ற காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரை காத்தான்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவதினமான இன்று காலை காத்தான்குடி பிரதான வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர் காத்தான்குடியில் இருந்து நாவற்குடா பிரதேசத்திற்குள் சென்றபோது அவரிடம் இருந்து 10 கிராம் அசிஸ் போதைப்பொருளை மீட்டதுடன் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

குறித்த நபரை தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் போதைப் பொருள் சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.