கைத்துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

kaithu

முல்லேரியா களனிமுல்ல பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து உள்நாட்டு உற்பத்தியிலான கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.