மேலும் 231 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 3
திரும்பினர் 3

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 231 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, கட்டாரிலிருந்து 30 பேர், சைப்பிரஸிலிருந்து 201 பேர், கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்றுகாலை வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தவிர மேலும் 375பேர் இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்.

அதன்படி, உக்ரைனிலிருந்து 192 பேர், ஒமானிலிருந்து 48 பேர், மாலைத்தீவிலிருந்து 50 பேர், துருக்கியிலிருந்து 10 பேர், பாகிஸ்தானிலிருந்து 5 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸி லிருந்து 70 பேர் இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்.