மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி திட்டம்

01 11 1 2
01 11 1 2

ஜனாதிபதி கோட்டாபய எண்ணக்கருவில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலையான வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 470 மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலையான வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 159 மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் யூ.எல்.அஹமட் லெப்பை தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் அரிசி, கடலை, டின் மீன், பிஸ்கேட் என்பன அடங்கிய உணவுப் பொதிகள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.