அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – உறவினர்கள் கோரிக்கை

IMG 20210107 WA0002
IMG 20210107 WA0002

கொரோனா தொற்றால் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் சர்வமத தலைவர்கள் முன்னிலையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சர்வமத கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம் தியாகி அறக்கொடை மண்டபத்தில் இன்று(07) நடைபெற்றது

ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம் எனும் தொனிப் பொருளில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால், இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறை இருட்டில் இருக்கும் எமது உறவுகளை தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில் கருணை அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் உள்ள சர்வமத பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கான மகஜர் ஒன்றும் மதத் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது