யாழ்பல்கலைகழகத்திற்குள் அமைக்கப்படடிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு முதல் யாழ்பல்கலைகழகத்திற்கு முன்னாள் பெரும் போராட்டம் இடம்பெறுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன் சிறிதரன் சட்டத்தரணி சுகாஸ் உட்பட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொணடுள்ளனர்.
யாழ்பல்கலைகழகம் முன்பாக பெருமளவு இராணுவத்தினரும் காவற்துறையினரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் தொடர்கின்றது.