மேலும் 511 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

திரும்பினர் 4
திரும்பினர் 4

கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 511 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 340 பேர், கட்டாரிலிருந்து 126 பேர், இந்தியாவிலிருந்து 45 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்த டைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், சீனாவிலிருந்து 12 பேர் மற்றும் ஒமானிலிருந்து 50 பேர் இன்றைய தினம் வருகை தரவுள்ளனர்.