வவுனியா ஓமந்தை பகுதிகளிலுள்ள வசதியற்ற பாடசாலை செல்லும் மாணவர்கள் 28 பேருக்கு இன்று (09) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
ஓமந்தை கிராம அலுவலகர் பிரிவுகளை உள்ளடக்கிய தாய் தந்தைகள் அற்று உறவினர்களுடன் வசித்துவரும் மற்றும் வசதியற்ற பாடசாலை செல்லும் மாணவர்கள் 28 பேருக்கு ஓமந்தையில் வசித்துவரும் சமூக ஆர்வலர் ஆ . சிரேஸின் நிதி பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சட்டத்தரணியும் வவுனியா நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியுமான ஜெ . ஆரூரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.