உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டிலிருந்து சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதை அரசாங்கம் தடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரசினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பின்பற்றாத சுற்றுலாப்பயணிகள் மூலம் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்க முயல்வது ஆபத்தானது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்