கொவிட்-19 நோயாளர்களின் தொடர்புகளைக் கண்டறிய உதவிடும் பொருட்டு பேருந்தினுள் அதன் இலக்கத்தைக் காட்சிப்படுத்துமாறு தனியார் மற்றும் எஸ்.எல்.ரி.வி(SLTB) பேருந்துகளின் உரிமையாளர்களிடம்காவற்துறையினர் இன்று கேட்டுக்கொண்டனர்.
பேருந்தில் பயணிக்கும் பயணிகள் தாம் பயணிக்கும் பேருந்தின் இலக்கத்தை குறித்துக் கொள்ள இது உதவும் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றாளர் ஒருவர் பேருந்தில் பயணித்திருந்தால் மற்றய பயணிகளுக்கு அறிவிக்கவும் மற்றும் தொடர்புகளைக் கண்டறியவும் பேருந்தின் இலக்கத்தை தெரிந்திருப்பது உதவியாக இருக்கும் என அவர் கூறினார்.