மேலும் 297பேருக்கு கொரோனா – சவேந்திர சில்வா

PCR Test covid corona 4 300x150 1
PCR Test covid corona 4 300x150 1

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 297 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 844 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 602ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6 ஆயிரத்து 539 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது கொரோனா தொற்றால் மேலும் 521 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 723 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 225ஆக அதிகரித்துள்ளது.