மேலும் 195 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

gh 11
gh 11

கொவிட்-19 பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 195 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 68 பேரும், ஜப்பானில் இருந்து 50 பேரும், கட்டாரிலிருந்து 45 பேரும், மாலைத்தீவிலிருந்து 24 பேரும் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 8 பேரும் இன்று காலை கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.