மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

death 2
death 2

பொகவந்தலாவ காவற்துறை பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அந்தோனி சாமி வயது 62 என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

மேற்படி நபர் தனது மரக்கறி தோட்டத்தை மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்சார வேலியை சட்டவிரோதமாக பொருத்தியுள்ளார்.

குறித்த நபர் ஒவ்வொரு நாளும் தோட்டத்திற்கு செல்லும் போது மின்சாரத்தை துண்டித்துவிட்டு செல்வதாகவும் நேற்றைய தினம் அதனை துண்டிக்காது மறந்து சென்றதனால் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் நீதவானின் மேற்பார்வையின் பின் பிரேத பரிசோதனைக்காக  டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.