யாழ் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து பிரிட்டன் அமைச்சர் கவலை!

lord taric aha 1 300x300 1
lord taric aha 1 300x300 1

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக பிரிட்டனின் மனித உரிமைகள் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ள தாரிக் அஹமட் பிரபு இலங்கையின் மோதலில் துன்பகரமான விதத்தில் பலியானவர்களை நாங்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.


இது கடந்தகாலத்தின் காயங்களை ஆற்றுவதுடன் நல்லிணக்கத்திற்குஉதவும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.