கொவிட் -19 காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்ட புகையிரத சேவைகள் நாளை(12) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி பிரதான பாதை, கரையோர பாதை, களனிவெளி பாதை மற்றும் வடக்கு பாதை ஆகிய மார்க்கங்களில் பல புகையிரத சேவைகளைத் தொடங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.