காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

suicide man Kill Death Dead Body
suicide man Kill Death Dead Body

மெதிரிகிரிய – சமகிபுர பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெதிரிகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை காட்டுயானையை விரட்டுவதற்கு முற்பட்ட விவசாயி ஒருவர் , அந்த யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சமகிபுர பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

காட்டு யானை ஒன்று தனது தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து , அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்திக் கொண்டிருப்பதை அவதானித்த விவசாயி , பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அதனை விரட்டமுற்பட்டுள்ளார். இதன்போது , குழப்பமடைந்த யானை அவரை தாக்கியுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் , மெதிரிகிரிய காவல்துறையினர் சம்பவம் தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.