அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடைக்கு பதிலாக, இந்தமுறையும் வவுச்சர்களே வழங்கப்படும் எனவும், அடுத்த ஆண்டு 2ம் வாரத்தில் குறித்த வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக, அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.