தற்கொலை செய்துகொண்ட முன்னாள் போராளி

parameswaran
parameswaran

மட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கானகன் என இயக்கத்தில் அழைக்கப்படும் சுந்தரலிங்கம் பரமேஸ்வரன் என்னும் 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆரையம்பதிக்கு வந்து உறவினர் வீட்டில் வசித்து வந்த அவர் வறுமை நிலை மற்றும் இறுதி யுத்தம் தொடர்பில் மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு சிறு வயதில் 2 பிள்ளைகளும் வறுமை நிலையில் வன்னியில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.