நாட்டில் சீரற்ற கால நிலையால் 23 ஆயிரம் பேர் பாதிப்பு

Ra060f5403874b6248fe615469d0d7f24
Ra060f5403874b6248fe615469d0d7f24

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஜனவரி 2ம் திகதி முதல் நேற்றுவரை 23,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 5,137 குடும்பங்களை சேர்ந்த, 16 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் 1,672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.