தனியார் வகுப்பு ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக தாம் முன்னின்று பேச தயார்:எதிர்கட்சி தலைவர்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 14
625.500.560.350.160.300.053.800.900.160.90 14

கொரோனா அச்சம் காரணமாக தனியார் வகுப்புக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதை அடுத்து தனியார் வகுப்புக்களை நடாத்தி வந்த ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக தாம் முன்னின்று பேச தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் தனியார் வகுப்புக்களை நடாத்தி வரும் ஆசிரியர்களுக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்க அனுமதியளிக்கப்படாமை தொடர்பில் ஆசிரியர்கள் எதிர்கட்சி தலைவரிடம் முறையிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.