நாட்டில் மேலும் 695 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 683 திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 47ஆயிரத்து 810 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 12 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 7080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 741 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது