நாடாளுமன்ற ஊழியர்கள் ஐவருக்கு இன்று கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதன்படி நாடாளுமன்ற உணவு-பான பிரிவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், போக்குவரத்துப் பிரிவு ஊழியர் ஒருவர், இரு காவற்துறையினர் மற்றும் அரசாங்க பிரதம கொறடா அலுவலகப் பணியாளர் ஆகியோரே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி 13ஆம் திகதி 463 நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்,அமைச்சர்களுக்கும் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஐவரைத் தவிர ஏனைய அனைவருக்கும் தொற்றில்லை என அறிக்கை காட்டியது.
இதேவேளை நேற்று 478 நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் 16 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் மேலும் கூறினார்.