மறு அறிவித்தல் வரை வவுனியா மாவட்டத்தில் திருமண மண்டபங்களில் திருமணங்களை நடத்துவது மற்றும் பொதுச்சந்தைகளை மீள திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அதேநேரம், மருதனார் மட கொத்தணியில் இருந்து தற்காலிக இடத்திற்கு மாற்றப்பட்ட பொதுச்சந்தைகளை இன்று முதல் மீளவும் பழைய இடங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.