மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

Screenshot 20210118 121932 Chrome
Screenshot 20210118 121932 Chrome

மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் இன்று (18) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மடு வலய கல்வி அலுவலகத்தில் தேசிய கல்வியில் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 61 ஆசிரியர்களுக்கு நியமனம் வழக்கி வைக்கபட்டது.

குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு மடு வலய கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் தலைமையில் காலை 9.30மணிக்கு மடு வலய கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் திருமதி .அஞ்சலி சாத்தசீலன் மற்றும் வலய கல்வி அலுவலக அதிகாரிகள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.