போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் காவல்துறை பரிசோதகர் கைது

kaithu

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் காவல்நிலைய குற்றவிசாரணை பிரிவின் காவற்துறை பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று முற்பகல் அனுராதபுரம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது, 43 வயதுடைய குறித்த சந்தேக நபரிடம் இருந்து 5 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்மூலம், போதைப்பொருள் வர்த்தகத்திற்கு அவர், உதவி புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.