மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்றவாறான எரிபொருள் விலையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கடந்த அரசாங்கத்தில் அமுலிலிருந்த எரிபொருள் விலைச் சூத்திரம் இனிமேல் இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் செய்தது போன்று ஒவ்வொரு ரூபாயாக எரிபொருள் விலையை அதிகரிக்க எந்தவொரு எதிர்பார்ப்பும் எமக்கில்லை.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் இராஜாங்க அமைச்சராக வாசுதேவ நாணயக்கார தமது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார்.