126 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – அஜித் ரோகண

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 126 அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் 1004 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 848 நிறுவனங்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.