அடுத்த மாத இறுதிக்குள் இலங்கையர்களுக்கு தடுப்பூசி -கெஹெலிய

ரம்புக்வெல
ரம்புக்வெல

அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தடுப்பூசியை 50 விகிதம் இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தற்போது நான்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.