சர்வதேச ஒத்துழைப்புக்கான விசேட அலகொன்றை நிறுவுவதற்காக முன்வைக்கப்பட்டிருந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த யோசனையானது வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆசியாவை மையமாக கொண்டு வளர்ந்து வரும் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றமடைவதால் வலுவான பொருளாதார இராஜதந்திர அணுகுமுறைகளை பெற்றுக்கொள்வதற்காக முக்கிய அனைத்து நிறுவனங்களின் நடவடிக்கைகளும் இதன்மூலம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
அதற்காக துறைசார் நிபுணர்கள் அடங்கலாக சர்வதேச ஒத்துழைப்புக்கான விசேட அலகு நிறுவப்படவுள்ளது.