மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய குருக்களின் வீட்டில் கொள்ளையிட்டவர் கைது

kaithu

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபாரணங்களை கொள்ளையிட்ட உதவி குருக்கள் ஒருவரை நேற்று இரவு (19)கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபாரணங்களை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த ஆலயத்தின் குருக்கல் அவரது மனைவி ஆகிய இருவரும் சம்பவதினமான நேற்று முன்தினம் காலை(18) 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் பின் கதவை உடைத்து அங்கிருந்த அலுமாரியில் இருந்த தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதை கண்டனர்.

இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் பரிசோதகர் எம்.ஜி.பி.எம். முகமட் ஜெஸலி தலைமையில் மேற்கொண்ட விசாரணையில் ஆலையத்தின் உதவி குருக்கலாக கடமையாற்றிவந்த 29 வயதுடைய கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.