பாணந்துறை நகரை அண்மித்த சில பகுதிகளில் நாளை இரவு 08 மணி முதல் 08 மணிநேர நீர் விநியோகத்தடை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
பாணந்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், வாழைத்தோட்டம் தவிர்ந்த ஏனைய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் வாத்துவ பிரிவுக்கும் இவ்வாறு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.