சுகாதார விதிமுறைகளை மீறிய 18 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்திற்கு வெளியே 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான குற்றச்சாட்டுக்ளுக்காக நாடு முழுவதும் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 2,680 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதிப் காவல்துறை மா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.