மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், காவல்துறையினர் உட்பட 11 பேருக்கு கொரோனா!

542203 1
542203 1

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 11 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 533 ஆக அதிகரித்துள்ளதாக இன்று வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பி சி ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த நிலையில் களுவாஞ்சிக்குடி காவல்துறை நிலையத்தில் கடமையாற்றும் 4 காவல்துறையினர், செங்கலடி சுகாதார பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கும், ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 2 பேர் உட்பட 11 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் புதிய தொற்றாளர்களாக கண்டறியப்பட்டது

இந்த நிலையில் மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி சுகாதார பிரிவில் 8 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாவட்டத்தில் இதுவரை 533 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.