திருக்கோணமலையில் பல நூற்றாண்டு வரலாற்றை கொண்ட திருக்கோணேச்சரத்தின் ஏழு எல்லை காவல் தெய்வங்களில் ஒன்றான பன்குளம், பறையன்குளம் அருள்மிகு எல்லை காளி அம்மன் ஆலய வருடாந்த தைப்பூசப் பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 28ஆம் திகதி இடம் பெறுவதை முன்னிட்டு இன்றைய தினம் (21.01.2021) திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தொண்டரணியின் பங்களிப்புடன், பன்குளம் பிரதேச மக்களும் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி அளவில் காட்டுக்குள் பிரவேசித்த தொண்டர்கள் காட்டு வழியின் ஊடாக பல சிரமங்களுக்கு மத்தியில், 7கி.மீ தூரமான பாதையில் இருபக்கமும் சிரமதானம் செய்து கொண்டு, பயணித்து சுமார் 10 மணியளவில் ஆலயத்தை சென்றடைந்தனர்.
பின்னர் ஆலயத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர்.