ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரான முதலாவது செயற்குழு கூட்டத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கொள்கை தயாரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக செயற்குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன, பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, உபதலைவர் அகில விராஜ் காரியவசம், பொருளாளர் எம்.எஸ்.எம்.மிஸ்பா ஆகியோர் தமது கடமைகளை நேற்று பொறுப்பேற்றனர்.
எவ்வாறாயினும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான காமினி விக்ரம பெரேரா, தயா கமகே, சாகல ரத்னாயக்க, நவின் திஸாநாயக்க, அர்ஜூனா ரணதுங்க உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.