தெமோதரைக்கும் ஹாலி-எலைக்கும் இடையிலான புகையிர மார்க்கத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் மலையகத்திற்கான புகையிர சேவை யில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 6.20 மணி அளவில் பதுளையிலிருந்து கண்டிநோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவை கள் தெமோதரை மற்றும் ஹாலி – எல ஆகிய புகையிரத நிலையங்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது