மேல் மாகாணத்தில் திருடப்படும் வாகனங்களைக் கண்டறிய காவற்துறையினர் விஷேட நடவடிக்கை

Auto 1
Auto 1

திருடப்பட்ட வாகனங்களைக் கைப்பற்றும் ஒரு முயற்சியாக மேல் மாகாணத்திலுள்ள வாகன உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் மற்றும் வாகனம் பழுது பார்க்கும் பட்டறைகளில் ஒரு விஷேட நடவடிக்கையை தாம் ஆரம்பித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையில் ஒரு காவற்துறை குழு சகல காவல் நிலையங்களிலும் உருவாக்கப்பட்டு அனைத்து வாகன உதிரிப்பாக விற்பனை நிலையங்களில் அவர்கள் விற்கும் வாகனங்களின் இயந்திரம் மற்றும் சேசிஸ் எண்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதன்படி திருடப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றை பேலியகொட காவற்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் திருடப்பட்ட எட்டு மோட்டார் சைக்கிள்கள், இரு முச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு கார் ஆகியனவும் காவற்துறையினர் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.