சுகாதார விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அத்துடன் 2600 நபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.